Home » பல கேள்விகளோடு காத்திருக்கும் மல்லிப்பட்டிணம் பொதுமக்கள்!!!

பல கேள்விகளோடு காத்திருக்கும் மல்லிப்பட்டிணம் பொதுமக்கள்!!!

0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் ஊராட்சியில் புதியதாக துறைமுக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.இந்த துறைமுக கட்டுமானப் பணியை ஆரம்பத்தில் இருந்தே சிலர் எதிர்த்து வந்தனர்.

துறைமுகம் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.துறைமுகத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்புதல் போன்ற முடிவுகளால் அங்கு வசிக்க கூடிய பொதுமக்களும்,மீனவ மக்களும் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இத்திட்டம் சாகர் மாலா திட்டத்தின் கீழ் செயல்படுகிறுதா? போன்ற பல கேள்விகளை அம்மக்கள் எழுப்பி வருகின்றனர்.இத்திட்டம் ஆரம்பிக்கும் முன் எப்படி இருந்ததோ அந்த நிலைமை மாறி மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டதோ என்று எண்ணுகின்றனர்.

இத்திட்டத்தால் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் அச்சம் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது.இதனை போக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அரசு நிர்வாகம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter