மனித நேய மக்கள் கட்சியின் பிப்ரவரி7ஆம் தேதி கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோட்டை முதல் கன்னியாகுமரி வரை கடலோர பகுதிகளில் கொடியேற்றம் ,தெருமுனை பிரச்சாரங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இந்த கட்சி துவக்க விழாவின் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டதின் கடலோர பகுதியான அதிரை முதல் மந்திரிப்பட்டினம் வரை பல நிகழ்ச்சிகள் அப்பகுதி நிர்வாகம் சார்பில் நடைபெறவுள்ளது.
துவக்க விழா நிகழ்ச்சிகள்:-
1). அதிரை ECR சாலையில் நான்கு இடங்களில் கொடியேற்றம் நிகழ்ச்சி..,
2). நகர அலுவலகத்தில் மௌலானா ஆஸாத் படிப்பகம் திறப்பு..,
3). அதிரை பேருந்து நிலையத்தில் தெருமுனை பிரச்சாரம்..,
4). சேதுபாவா சத்திரத்தில் ஒரு இடத்தில் கொடியேற்றம் மற்றும் தெருமுனை பிரச்சாரம்..,
4). மரைக்காவலசல் புதுதெரு ஜமாத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு இடங்களில் கொடியேற்றம் மற்றும் அலுவலகத்தில் மௌலானா ஆஸாத் படிப்பகம் திறப்பு..,
5). செந்தலை பட்டினத்தில் மூன்று இடங்களில் கொடியேற்றம் மற்றும் தெருமுனை பிரச்சாரம்..,
6). மந்திரிபட்டினத்தில் ஒரு இடத்தில கொடியேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
அதுமட்டுமின்றி மல்லிப்பட்டினம், புதுபட்டினம், சம்பை பட்டினம் ஆகிய இடங்களில் கிளை இல்லாததால் சூழ்நிலைக்கேற்றவாறு அப்பகுதியில் மரம் நடுதல், ஏழைகளுக்கு உணவு வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.