அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் களைகட்டிய அம்மா வார சந்தை.
தமிழகத்தின் முக்கிய ஊர்களில் அம்மா வார சந்தை பிரதிவாரத்தில் ஒரு நாள் சந்தையில் விற்பனை நடைபெற்று வருகிறது. இச்சூழ்நிலையில் மல்லிப்பட்டிணத்தில் பிரதிவாரம் சனிக்கிழமை அம்மா வார சந்தை சென்ற வாரம் முதல் ஜூம்ஆ பள்ளி எதிர்புறத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று சந்தையில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. பெண்களின் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பல்வேறு சுற்றுப்புற ஊர்களில் இருந்தும் தங்கள் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் வத்தல் வகைகள் என வாங்கி சென்றனர்.
மேலும் சந்தையின் போது பெண்கள் சாலையை கடக்கும் போது அச்சப்படகின்றனர்.ஆகவே அச்சத்தை போக்க காவல்துறை உரிய பாதுகாப்பை சரி செய்திட வேண்டும் என்பது சந்தைக்கு வரும் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.