தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் விபத்திற்குள்ளானோர்களை தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அளவிற்கு அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலர் இறந்துவிடும் நிலை நிலவி வருகிறது.
இந்நிலையை போக்கும் வகையில் பட்டுகோட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று சனிக்கிழமை காலை போராட்டம் நடத்தபோவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து, இன்று காலை பட்டுகோட்டை அரசு மருத்துவமனையின் அருகாமையில் இளைஞர் கூட்டம் கூட ஆரம்பித்தனர்.
அதன் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்பினால் இளைஞர்கள் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டன. இதனையடுத்து, பட்டுகோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் அருகாமையில் இளைஞர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதன் பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.