Home » திருமாவளவனுக்கு மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட்!

திருமாவளவனுக்கு மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட்!

0 comment

வழக்கு ஒன்றில் தொடர்ந்து ஆஜராகாததால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

மதமாற்ற தடைச்சட்டத்தைத் திரும்ப பெறக்கோரி கடந்த 2003ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

அப்போது அனுமதிக்கப்படாத சாலையில் ஊர்வலம் நடைபெற்றதாகக்கூறி ஊர்வலத்தை தடுத்து நிறுத்திய போலீஸாருக்கும், விடுதலை சிறுத்தையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காவல் ஆய்வாளர் உட்பட 4 போலீஸார் தாக்கப்பட்டனர்.

மேலும் காவல்துறை வாகனம் மற்றும் பேருந்துகளின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. இதுத்தொடர்பாக திருமாவளவன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter