Home » இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா அப்துல் ரஹீம் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா அப்துல் ரஹீம் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

0 comment

சென்னை: இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய செயலாளர் தடா அப்துல் ரஹீமை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல்துறைஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தென்காசியைச் சேர்ந்தவர் சையத் முகமது புகாரி. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் மண்ணடியில் இருந்து கடத்தப்பட்டதாக காவல்கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.

இதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தேடிய நிலையில் சையத் முகமது புகாரியை மண்ணடி பகுதியில்மீட்டனர். இது தொடர்பாக ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக, இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவரான தடா ஜெ.அப்துல் ரஹீமை திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்தனர்.

தற்போது தடா அப்துல் ரஹீமை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்..

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter