Home » தடா. ரஹீம் குண்டர் சட்டத்தில் கைது – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

தடா. ரஹீம் குண்டர் சட்டத்தில் கைது – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

0 comment

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கையில்

இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் தடா அப்துல் ரஹீம் அவர்கள் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஏற்கெனவே ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த அப்துல் ரஹீம் நீதிமன்றம் மூலம் பிணைப் பெற்று இன்று சிறையிலிருந்து வெளியே வரும் சூழலில் சென்னை காவல்துறை திடீரென குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்துள்ளது ஏற்றுக்கொள்ள இயலாதது.

அப்துல் ரஹீம் மீது வழக்கு பதியப்பட்டிருந்தால் அதனை சட்ட ரீதியில் எதிர்க்கொள்ளமால் அவரைக் காவல்துறை முடக்க நினைப்பது அப்பட்டமான மனிதஉரிமை மீறல் ஆகும். ஜனநாயக உரிமைகளை நசுக்கும் செயலாகும்.

எனவே, தடா அப்துல் ரஹீம் மீது பதியப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்டத்தை உடனே வாபஸ் பெற்று அவரை விடுதலைச் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter