47
சிரியாவில் 2011 ம் ஆண்டு அதிபர் பஷார் அல் அசாத் படைகளுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே துவங்கிய சண்டை இன்றுவரை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே போராட்டக்காரர்களின் கிழக்கு கூட்டா பகுதி மீது அரசு படை நடத்திய தாக்குதுலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என தற்போது தெரிய வந்துள்ளது. கொத்து கொத்தாக குழந்தைகள் கொல்லப்பட்ட போட்டோக்களும் தற்போது வெளியாகி காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்து வருகின்றன.