டாஸ்மாக் மதுக்கடைகள் இல்லையென்றால் பல பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பார்கள் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் நடந்த விழா ஒன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். அமைச்சர் கூறியது அங்கு கூடியிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது. அமைச்சர் ஒருவரே டாஸ்மாக் மதுபான விற்பனையை ஊக்குவிப்பது போல் பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்