Friday, April 19, 2024

பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் இரண்டு கப்பல்கள் நிறுத்தி வைப்பு..!!

Share post:

Date:

- Advertisement -

ராமேஸ்வரம் பகுதியில் பலத்தக் காற்று வீசுவதால், மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் இரண்டு கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தென்கிழக்கு கடல்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாலத்தீவு அருகே நிலை கொண்டுள்ளதால், அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், தூத்துக்குடியில் இருந்து கடலூர் நோக்கி புறப்பட்ட இரண்டு கப்பல்கள் பாம்பன் தூக்குபாலத்தை கடக்க அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.

காற்றின் வேகம் குறைந்த பிறகே அனுமதியளிக்கப்படும் என தெரிவித்துள்ளதால், இரண்டு கப்பல்களும் கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனிடையே ராமேஸ்வரம் கடல்பகுதியில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...