Home » தஞ்சையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் நடைபெற்ற ONGC எதிர்ப்பு முற்றுகை போராட்டம்..!

தஞ்சையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் நடைபெற்ற ONGC எதிர்ப்பு முற்றுகை போராட்டம்..!

0 comment

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே ONGCயின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 1மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று(27/03/2018) காலை சுமார் 11மணியளவில் தமிழக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ், SDPI கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில தலைவர் வேல்முருகன் மற்றும் கம்யூனிட்ஸ் கட்சி தலைவர்கள் , நாம் தமிழர் கட்சி தலைவர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தஞ்சை அம்மாப்பேட்டையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மாபெரும் ONGC முற்றுகை போராட்டத்திற்கு பல பகுதிகளில் இருந்து கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்திற்கு அதிரை நகர தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter