Home » காவிரி விவகாரம்: அதிரையில் சாலை மறியல் திமுகவினர் கைது!!

காவிரி விவகாரம்: அதிரையில் சாலை மறியல் திமுகவினர் கைது!!

by admin
0 comment

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும் கள்ள மொளனம் சாதிக்கும் எடப்பாடி அரசையும் கண்டிக்கும் விதமாக திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்க்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டவர்களை போலிசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு. பகுதிகளில் திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்/சாலை மறியல் நடைபெற்றது.

அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திமுக சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைப்பெற்றது.

நகர செயலாளர் இராம குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மீனவ அணி துணை அமைப்பாளர் கோரி நாகராஜ், நகர அவைத்தலைவர் JJஷாகுல் ஹமீது, சிறுபான்மை அணி அமைப்பாளர் மரைக்கா இதிரீஸ் இன்பநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அவர்களை கைது செய்த போலிசார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

அதிரையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு.மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

 

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter