Friday, March 29, 2024

குவைத்தில் சாலை விபத்து: இந்தியர்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி மரணம்!!(video)

Share post:

Date:

- Advertisement -

 

குவைத்: குவைத்தில் நடந்த பயங்கர சாலைவிபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

இரண்டு பேருந்துகளில் தொழிலாளர்கள் பணிமுடிந்து தங்களது இருப்பிடம் திரும்பி கொண்டிருந்தனர். எதிரெதிர் திசையில் வந்த இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டது.

பர்கான் பீல்டு என்ற இடம் அருகே நெடுஞ்சாலையில் இரு பேருந்துகளும் எதிரெதிர் திசையில் வந்துகொண்டிருந்தன.

அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு பேருந்துகளும் ஒன்றோடு ஒன்று பலமாக மோதி விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடி மீட்பு பணியில் இறங்கியுள்ளனர். காயமடைந்தோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...