தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற
“அவர்கள் நம்மை நோக்கி வரும் முன்”
தேசிய பிரச்சார தெருமுனைக்கூட்டங்கள்!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் “அவர்கள் நம்மை நோக்கி வரும் முன்” தேசிய அளவிலான பிரச்சாரம் மார்ச் 20 முதல் ஏப்ரல் 15 வரை தேசம் முழுவதும் நடைபெறுகிறது. இதில் தெருமுனை கூட்டங்கள், பொதுகூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த பிரச்சாரம் மூலம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பேருந்து நிலையத்திலும்
சானவயல் பகுதியிலும் இன்று (05-04-2018)வியாழக்கிழமை தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர செயற்குழு உறுப்பினர் சலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் A.ஹாஜா அலாவுதீன் மற்றும் வழக்கறிஞர் நிஜாமுதீன் ஆகியோர் பிரச்சார உரை நிகழ்த்தினர்.
இதில் ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தடை செய்தது ஏன்?, மாட்டு அரசியல் மற்றும் பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கையை மக்கள் முன் எடுத்து கூறினார்.