Saturday, April 20, 2024

பட்டுக்கோட்டைக்கு வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு காவேரி மேலாண்மை வாரியத்தை மீட்பதற்கு கடந்த 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் திமுக தலைமையில் மற்றும் பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தது.

இதையடுத்து, தமிழகத்திற்கே துரோகம் செய்த மத்திய அரசு மற்றும் தமிழக அரசை கண்டித்தும், நம் உரிமையை மீட்பதற்கும், உடனடியாக காவிரி மேலாண்மை அமைத்திட வலியுறுத்தியும் திராவிட முன்னேற்ற கழகதின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாபெரும் ‘காவிரி உரிமை மீட்புப் பயணம்’ தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக நாளை (08/04/18) மாலை சுமார் 5 மணியளவில் பட்டுகோட்டை வருகைதருகிறார் மு.க.ஸ்டாலின்.

இந்த நடைபயணத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...