Home » பட்டுக்கோட்டையில் திமுக தலைமையில் அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற காவேரி உரிமை மீட்பு நடைப்பயணம்..!!

பட்டுக்கோட்டையில் திமுக தலைமையில் அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற காவேரி உரிமை மீட்பு நடைப்பயணம்..!!

by
0 comment

காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்கக்கோரி நேற்று மாலை திருச்சி முக்கொம்பிலிருந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தைத் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.இதனையடுத்து செயல் தலைவர் பல்வேறு கிராமங்கள்,ஊர்களுக்கு சென்று உரிமை மீட்போம் பயணத்தை மேற்கொண்டார்.

உரிமை மீட்பு பயணத்தை இன்று (08/04/18) காலை 7 மணியளவில் தொடங்கி மு க. ஸ்டாலின் காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட மீட்பு பயணத்தை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் வந்தடைந்தார், இதனையடுத்து அங்கே சாலையில் நடைபயணத்தை தொடங்கினர்.

இந்த உரிமை மீட்பு நடைபயணத்தில்
அண்ணண் டி.ஆர்.பாலு. A.K.S.விஜயன், து.செல்வம், பஞ்சூர்.K.செல்வம், அதிரை பேரூர் செயளாலர் இராம.குணசேகரன், துணைச்செயளாலர் A.M.Y.அன்சர்கான், முல்லை.R.மதி, T.முத்துராமன், மரைக்கா.K.இத்ரீஸ் அஹமது M.முகம்மது சரீப் , சுஹைப், மாவட்ட மற்றும் தோழமை கட்சியினர், ம.ம.க.மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா, முஸ்லீம் லீக் K.K.ஹாஜா நஜ்முதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter