Thursday, April 25, 2024

தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றும் தீர்ப்பு..? இன்று வெளியாகும் அதிரடி அறிவிப்பு..!!

Share post:

Date:

- Advertisement -

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

 
 

காவிரி விவகாரத்தில் இதற்கு பிறகு மேல் முறையீடு இல்லை என்று கூறி, இறுதி தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றமானது மார்ச் மாதம் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

 
ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை இடம்பெறவில்லை என கர்நாடகா தரப்பில் கூறப்பட்டது. தொடர்ந்து, மார்ச் 29 ஆம் தேதிக்கு பிறகும் மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் இதில் எடுக்கவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிவடைந்ததை தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் “ஸ்கீம்” என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி மத்திய ஒரு மனுவை தாக்கல் செய்தது.

மேலும் கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு அதில் தெரிவித்தது.

தமிழக அரசின் மனுவோடு, மத்திய அரசின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் இரு வழக்குகளையும் இன்று (ஏப்ரல் 9) விசாரிப்பதாக தெரிவித்திருந்தது.
இது தொடர்பான முடிவுகள் இன்று வெளியாக இருப்பதால், இரு தரப்பிலும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...