Home » சேப்பாக்கத்தில் மஞ்சளை மிஞ்சும் காக்கி !!!

சேப்பாக்கத்தில் மஞ்சளை மிஞ்சும் காக்கி !!!

0 comment

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி சென்னை சேப்பாக்கம் பகுதியை சுற்றியுள்ள ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது. மும்பையுடனான போட்டி முடிந்து சென்னை அணியினர் திரும்பிய நிலையில், கொல்கத்தா வீரர்களும் நேற்றுமாலை சென்னை வந்தடைந்தனர். வீரர்கள் பலத்த பாதுக்காப்புடன் ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீரர்கள் தங்குமிடத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் போட்டி நடைபெறும் மைதானத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சேப்பாக்கம் பகுதியை சுற்றியுள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம், சிந்தாதரிப்பேட்டை, பார்க் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கபட்டுள்ளது.3 காவல் ஆய்வாளர்கள் தலைமையில், 30க்கும் மேற்பட்ட ரயில்வே காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.மேலும் கூடுதலாக ரயில்வே போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு ரசிகர்கள் செல்வதற்கு வசதியாக இரவு நேரத்தில் இரண்டு சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter