காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் பல இடங்களில் பல்வேறு விதமான போராட்டங்கள் நிகழ்த்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் , IPL தொடரை சென்னையில் நடத்த கூடாது என்றும் , விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் இன்று சுமார் 700க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அசம்பாவிதங்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், பலத்த போலீஸ் பாதுகாப்பிலும் தமிழர் என்ற உணர்வில் நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் தங்களுடைய காலணிகளை ஆட்டம் நடைபெறும்போது மைதானத்திற்குள் உள்ளே எறிந்தனர்.
அந்த காலணிகளை கிரிக்கெட் வீரர் ஒருவர் எடுத்து வெளியே எறிந்தார்.
காலணிகளை எறிந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர்