Saturday, April 20, 2024

அதிரையில் நடைபெற்ற கலாம் நண்பர்கள் இயக்கம் போராட்டம்…!! அதிரை எக்ஸ்பிரஸிற்கு பிரத்யேக பேட்டி!!

Share post:

Date:

- Advertisement -

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க கோரியும், மீத்தேன் திட்டத்தை தடை செய்ய கோரியும் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இளைஞர்களாக ஒன்றிணைந்து
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே கலாம் நண்பர்கள் இயக்கம் அதிரை ஒன்றியம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், தூத்துக்குடி ஸ்டெர்லலைட் ஆலையை மூடக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் அதிரை பேருந்து நிலையம் அருகே சுமார் 5மணியளவில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலாம் நண்பர்கள் இயக்கத்தின் அதிரை ஒன்றிய செயலாளர் அலெஸ்ஜாண்டெர் அவர்கள் வரவேற்புரை வழங்க, தஞ்சை மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் கண்டன கோஷங்களை எழுப்பினார்.

இந்தஆர்ப்பாட்டத்தில் வாழ்த்துறையை பட்டுகோட்டை கலாம் இயக்க பொருளாளர் மதுசூதனன் வழங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டுகோட்டை மற்றும் அதிரையை சேர்ந்த இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு தங்களின் கண்டனத்தை பதிவுசெய்தனர்.

வீடியோ இணைப்பு:-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...