அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தனியார் பேருந்து விபத்து.
பட்டுக்கோட்டைலிருந்து மன்னார்குடி நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து நாகை பேருந்து நிறுத்தும் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாடை இழந்து எதிரே இருந்த பேருந்து நிறுத்தும் நிழற்குடையில் மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் 20க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் உடனே மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.