காஷ்மீர் மாநிலத்தில் 8வயது சிறுமி ஆசிபா பயங்கரவாதிகளால் கோவில் கருவறையில் வைத்து கற்பழிக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும் போராட்டங்களையும் வெடிக்க செய்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆசிபாவிற்க்கு நீதி கேட்டு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பட்டுகோட்டை தலைமை தபால் நிலையம் அருகே இன்று(21/04/2018) மாலை சுமார் 4:30மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் 700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களுடைய கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஆர்பாட்டதிர்க்கு அதிரையில் இருந்து நூற்றுகணக்கானோர் கலந்துகொண்டது குறிப்பிடதக்கது.