Thursday, March 28, 2024

பட்டுக்கோட்டை- காரைக்குடி ரயிலை மதுரை வரை நீட்டிக்க வலியுறுத்தல் !!

Share post:

Date:

- Advertisement -

காரைக்குடி முதல்  பட்டுக்கோட்டை வரை இயக்கப்பட உள்ள ரயிலை மதுரை வரை நீட்டிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான அகல ரயில் பாதை பணிகள் முடிந்து கடந்த மார்ச் 30ம் தேதி பயணிகளுடன் சோதனை ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்படலாம் என எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் ரயில் இதுவரை இயக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரை இயக்கப்பட உள்ள ரயிலை சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆதிஜெகன்னாதன் கூறுகையில், ‘பஸ் கட்டணம் மிக அதிகமாக உள்ளதால் ரயிலில் செல்வதையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். மதுரைக்கு ரயில் வசதி இல்லாததாலேயே கட்டணம் அதிகமாக இருந்த போதும் மக்கள் பஸ்சில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. மருத்துவம், வணிகம், கல்வி உள்பட பல்வேறு தேவைகளுக்கு மதுரைக்கு அதிகளவில் மக்கள் சென்று வருகின்றனர்.
தவிர தொடர் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மதுரைக்கு பஸ்களில் செல்லும்போது இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு முடியாத நிலை உள்ளது.

மதுரை வரை நீட்டித்து இயக்க மதுரை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதுமான வழித்தடம் இல்லையெனில் அத்தகைய வசதி ஏற்படும் வரை புறநகர் பகுதியான சிலைமான ரயில் நிலையம் வரை இயக்கலாம். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...