தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த அஹமது ஜாபிர் அவர்கள் மாநில அளவிளான கிராஆத் போட்டியில் கலந்துக்கொண்டு முதல் பரிசை தட்டி சென்றார்.
நாகை மாவட்டம் தோப்புத்துறையில் மாநில அளவிளான கிராஆத் போட்டி நடைபெற்று வந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று சனிக்கிழமை(05.05.2018)தோப்புத்துறையில் நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹாஃபிழ்கள் கலந்துக்கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த போட்டியில் அதிராம்பட்டினம் புதுமனை தெருவைச் சேர்ந்த சேஹன்னா ஆலிம் அவர்களின் மகன் ஜாபிர் ஹாஃபிழ் அவர்கள் முதலிடம் பெற்று , முதல் பரிசான ரூ. ஒரு லட்ச ரூபாயை தட்டிசென்றார்.
வெற்றி பெற்ற ஹாஃபிழ் ஜாபிர் அவர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ்ஸின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.