அதிரை எக்ஸ்பிரஸ்:- கர்நாடக சட்டசபை தேர்தலில் 150 இடங்களில் வெல்வோம் என்று கூறியிருந்த எடியூரப்பாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா தெரிவித்தார்.
சட்டசபை தேர்தல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
மொத்தம் 222 தொகுதிகளில் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா சிமோகா தொகுதியில் உள்ள ஷிகாரிபுராவில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.
அப்போது அவர் மேலும் பேசுகையில் கர்நாடகாவில் சித்தராமையா அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும். நாங்கள் 150 தொகுதிகளுக்கு மேல் கைபற்றும் என்று தெரிவித்தார்.
வாக்களித்த பிறகு காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா கூறுகையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும். எங்களுக்கே பெரும்பான்மை இடம் கிடைக்கும். 150 இடங்களில் வெல்வோம் என்று கூறிய எடியூரப்பாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது என்றார் சித்தராமையா.
பாஜகவின் ஸ்ரீராமுலு பெல்லாரியில் வாக்களித்தார். பதாமியில் சித்தராமையாவை எதிர்த்து ஸ்ரீராமுலு போட்டியிடுகிறார்
ஒன் இந்தியா