தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் ரமலான் மாதத்தில் சிறப்பு சொற்பொழிவுகள் நடப்பது ஒவ்வொரு வருடமும் வழக்கம்.
அதேபோப்,ரமலான் 2018 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நோன்பு பிறை 3 முதல் 20வரை அதிரையில் இரு இடங்களில் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.
தினந்தோறும் ஆண்களுக்காக இரவு 10மணிமுதல் 11:30மணிவரை நடுத்தெரு EPMS பள்ளிவளாகம் எதிரில் நடைபெறுகிறது. இங்கு பெண்களுக்கும் தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சியகத்தில் காலை 11மணிமுதல் 12மணிவரை நடைபெறுகிறது.இதற்க்கு வாகன வசதிகளுக்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரமலான் 2018ட்டிற்கான சொற்பொழிவு நிகழ்வில் மௌலவி ஹுசைன் மன்பஈ அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.
இந்நிகழ்ச்சியில்,அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு இறைவனின் அருளை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் அதிரை தாருத் தவ்ஹீத்.