Home » சவூதி அரசின் அவசர அறிவிப்பு..! 29ஆம் நோன்பிற்குள் நாடு திரும்ப உம்ரா ஏஜெண்ட்களுக்கு அறிவிப்பு..!

சவூதி அரசின் அவசர அறிவிப்பு..! 29ஆம் நோன்பிற்குள் நாடு திரும்ப உம்ரா ஏஜெண்ட்களுக்கு அறிவிப்பு..!

0 comment

சவூதி அரேபியா ஜித்தா பகுதியில் உள்ள மக்காவில் பொதுவாகவே பல்வேறு நாடுகளில் இருந்து இஸ்லாமிய மக்கள் வருவதும் , நாடு திரும்புவதுமாக இருக்கும்.

இஸ்லாமியர்களின் புனித தளங்களில் முதன்மையாக விளங்கும் மக்காவில் பல நாட்டு மக்கள் உம்ரா செய்ய வருகை தருகின்றனர்.

ஒரு நாளைக்கு குறைந்தது சுமார் ஐம்பது லட்சம் முதல் கோடி கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.

இதனிடையே, இன்னும் ஒரு சில தினங்களில் நோன்பு ஆரம்பமாக இருப்பதால் சவுதி அரேபியா அரசின் அவசர கால அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பு எண்:- 1523/865/2018
அறிவித்த தேதி:-07/05-2018

அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது :

சவூதி அரேபியாவிற்கு உம்ரா செய்ய 19வது நோன்பிற்கு முன்னர் வருகை தரும் மற்ற நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய பெருமக்கள் தங்களது உம்ராவை 29வது நோன்பிற்குள் முடித்து நாடு திரும்ப வேண்டும் என உம்ரா ஏஜெண்ட்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பை சவூதி அரேபியாவில் பெருநாள் அன்று கூட்ட நெரிசலை குறைக்கும் விதத்திலும், விபத்துகளை தடுக்கும் வகையிலும் வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பை மீறுபவர்களுக்கு சவூதி அரேபியா அரசினால் 2000 ரியால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உம்ரா ஏஜெண்ட்கள் தங்கள் டிராவல்ஸ் மூலம் சவூதிக்கு வருகை தரும் இஸ்லாமிய யாதிரிகர்களை 29வது நோன்பிற்குள் சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter