Home » மல்லிப்பட்டினம் கடற்கரைக்கு அனுமதியில்லை பேனரால் பரபரப்பு!!

மல்லிப்பட்டினம் கடற்கரைக்கு அனுமதியில்லை பேனரால் பரபரப்பு!!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் கடற்கரையில் வைக்கப்பட்ட பேனர் பலரையும் ஆச்சரியத்தையும்,பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்திலே மீன்பிடி தொழிலில் பிரசிதிப்பெற்ற ஊர் மல்லிப்பட்டினம். அப்படியிருக்கையில் இங்கு துறைமுகம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்து அதற்கான பணிகள் படுவேகமாக நடந்துவருகின்றன.அந்தவகையில் உள்ளே யாரும் அனுமதியில்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு பலகை மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

துறைமுகம் அமைப்பதால் மீனவ மக்களின் முன்னேறும் என்றே எதிர்ப்பார்த்தனர்.ஆனால் நாளொரு வண்ணம் பொழுதொரு வண்ணமாக துறைமுகம் சார்ந்த அரசின் அதிரடி அறிவிப்பால் மீனவர்கள் திக்குமுக்காடி போய் உள்ளன மீனவர்கள் மற்றும் பொதுமக்கள்.

மல்லிப்பட்டினம் துறைமுகம் கட்டுமானம் பற்றியான பல்வேறு கேள்விகளும் குழப்பங்களும் தொடர்ந்து நீடித்த வண்ணமே இருக்கின்றன.அதற்கான சரியான விளக்கத்தை கொடுக்க வேண்டிய அரசோ,அதிகாரிகளோ கொடுத்திடவில்லை.

இந்த திட்டம் மீனவ மக்களை நசுக்க காத்திருக்கும் சாகர் மாலா திட்டத்தின் கீழ் வருமா? இந்த திட்டத்தால் குடியிருப்புகள் காலி செய்யப்படுமா? என்ற கேள்விகளுடன் காத்திருக்கின்றனர்.

அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களும் அந்த மக்களுடன் இணைந்து அவர்களுக்கான குரலை வலுப்படுத்த வேண்டும் என்பது அம்மக்களின் எதிர்ப்பார்ப்பு….

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter