அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரையை சுற்றி செல்லக்கூடிய பேருந்தில் பாடல்கள் என்ற பெயரில் இரட்டை அர்த்தக்கங்களை கொண்ட பாடல்கள் தொடர்ந்து ஒலிப்பரப்புவதாக பயணிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
இந்த வரிசையில் குறிப்பாக அதிரையருக்கு சொந்தமான பேருந்தில் ஒலிப்பரப்புவது தான் மிகவும் வேதனையளிப்பதாக அந்த பயணி நம்மிடம் கூறினார்.மேலும் பேருந்துகளில் அதிகமாக பயணிப்பது பெண்கள் தான் அதிகம் அப்படியிருக்கையில் இது போன்ற ஆபாச பாடல்கள் அவர்களுக்கு நெருடலும்,முக சுழிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.அதே போல் பேருந்தில் பணிபுரியும் கண்டக்டர்களும் சர்ச்சைக்குரிய நபர்களே இருப்பதாக ஒரு குற்றச்சாட்டும் உள்ளது.ஆகையால் பயணம் கூடுமானவரை பயணம் மேற்கொள்ளும் போது பெண்கள் பெண்கள் அதிகமாக இருக்கும் பேருந்தில் பயணிப்பது நலம்.
அதிரையர்களுக்கு சொந்தமான அந்த பேருந்துகளில் உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள உரிமையாளர்கள் வழிவகை செய்யவேண்டும்..