தமிழகம் முழுவதும் தற்பொழுது பல்வேறு பகுதியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி பல்வேறு இளைஞர் அமைப்பினர், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே தூத்துக்குடியில் ஸ்டெர்லைடிற்கு ஆலையை மூடகோரி போராடிய மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்திய அரசை கண்டித்து கடந்த(23/05/2018) மாலை 04:30மணிக்கு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் பல்வேறு பொதுமக்கள் கட்சி வேறுபாடு இன்றி கலந்துகொண்டு தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
இந்த போராட்டத்தில் 60க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.