Friday, April 19, 2024

கேரளாவில் பெட்ரோல் , டீசல் விலை ஜூன் 1 முதல் குறைப்பு !! தமிழகத்திலும் குறைக்கப்படுமா ?

Share post:

Date:

- Advertisement -

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையால் கடந்த 15 நாட்களில் மிகப் பெரும் விலையேற்றத்தை அடைந்துள்ளது. மொத்தமாக இந்த 15 நாட்களில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 3.8-ம், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3.38 காசுகளும் உயர்ந்துள்ளது.

இந்த விலையேற்றங்கள் உள்ளூர் வரி அல்லது வாட் வரிக்கு ஏற்ப மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. மெட்ரோ மற்றும் மாநில தலைநகர்களிலேயே டெல்லியில்தான் பெட்ரோல் டீசல் விலை குறைவு ஆகும்.

எனினும் இன்றைய தினம் பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளது. எவ்வளவு என்று பார்த்தால் வெறும் ஒரு பைசா மட்டுமே. ஏறும் போது ரூபாயிலும், இறங்கும்போது பைசாவிலும் இறங்குவது வாடிக்கையாகவே உள்ளது.

இந்த விலையேற்றத்தால் மக்கள் துயரம் அடைந்து வரும் நிலையில் கேரள அரசோ பெட்ரோல் டீசல் விலையில் ரூ. 1 குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதன் மூலம் பெட்ரோல் டீசல் விலையை குறைத்த முதல் மாநிலம் என்ற பெருமையை பெறுகிறது கேரளா.
இந்த விலை குறைப்பு வரும் வெள்ளிக்கிழமை அதாவது ஜூன்1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

அண்டை மாநிலமான கேரளாவில் பெட்ரோல் , டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்திலும் பெட்ரோல் , டீசல் விலையை அரசு குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...