204
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அரசு பேருந்தில் பயணம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று (31/05/2018) வியாழக்கிழமை மாலை அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து(எண்.TN.68 N.0245 ) வண்டிப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் மேற்கூரை திடீரென
காற்றில் பறந்து பொதுமக்கள் அருகே கீழே விழுந்தது.
இதனால் அவ்வழியாக வந்த பொது மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகினார்கள்.