55
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை ~அதிரை இடையே சாலைகளின் ஓரங்களில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதிரை ~பட்டுக்கோட்டை சாலையில் அடிக்கடி வாகன விபத்துக்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.ஆகவே அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் காளி கோவில், சேண்டக்கோட்டை, மாலியகாடு ஆகிய பகுதிகளில் தடுப்புக் கம்பிகள் அமைக்கும் பணி முழுவீச்சாக நடைபெற்று வருகிறது.