Home » கோவையில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அளவிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்!!

கோவையில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அளவிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்!!

0 comment

கோவையில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அளவிலான கள்ள நோட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை சாய்பாபா காலனியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது அந்த வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்த என்பவர் தனது கைபையை காவல் துறையினரிடம் இருந்து மறைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரது கைபையை சோதனை செய்த போது அதில் 2000 ரூபாய் தாள்கள் அதிகளவில் இருந்தனர். இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரனையில் பையில் இருந்தவை அனைத்தும் கள்ள நோட்டுக்கள் என தெரியவந்தது.

மேலும் காடாக சாலையில் வேளாண்டிபாளையத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் கள்ள நோட்டுக்களை அச்சடித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற கோவை மத்திய பிரிவு காவல் துறையினர் 1 கோடியே 20 லட்சம் அளவிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். கைப்பற்றவை அனைத்தும் 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் ஆகும். மேலும் கள்ள நோட்டு அச்சடிக்க பயண்படுத்திய கணினி, பிரிண்டர், கட்டிங் இயந்திரம் ஆகியவற்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆனந்த் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது கூட்டாளி 2 பேரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter