தஞ்சை மாவட்டம்
அதிராம்பட்டினம் அடுத்து உள்ள கொள்ளுக்காடு கிராமத்தை சேர்ந்த பாக்யராஜ் இவர் இன்று(13.06.2018) இரவு 12.15 மணியளவில் மகிலாங்கோட்டை வழியாக தனது இருசக்கர வாகனத்தில் வரும்பொழுது அடையாளம் தெரியாத வாகனத்தால் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளார்.
அவ்வழியாக வந்த பொதுமக்கள் அவரை மீட்டு அதிரை தமுமுக அவசர ஊர்தி மூலம் பாக்யராஜை அதிரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துஉள்ளனர்.
பாக்யராஜ் அவர்களுக்கு தலையிலும், உடலிலும் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதால், அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு தற்பொழுது மேல்சிகிச்சைக்காகவேண்டி அதிரை த மு மு க ஊர்தி மூலம் தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டுசென்று உள்ளனர்.
இந்த விபத்து குறித்த அதிரை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.