68
அதிரை எக்ஸ்பிரஸ்:- உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து வந்தனர். நேற்று ஷவ்வால் பிறை வெளி நாடுகளில் தென்பட்டதை அடுத்து அங்கு இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் பணி, தொழில் நிமித்தமாக இருக்கும் மல்லியூரின் மக்கள் இன்று நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றனர். ஒருவொருக்கொருவர் வாழ்த்துக்கள் பரிமாறிக்கொண்டும்,புகைப்படங்களை எடுத்து கொண்டும் கொண்டாடி வருகின்றனர்.
அவர்களுக்கு எங்களின் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்.