Home » மல்லிப்பட்டினத்தில் ஜூன் 29ல் சாலை மறியல் மீனவ சங்கம் அறிவிப்பு….!

மல்லிப்பட்டினத்தில் ஜூன் 29ல் சாலை மறியல் மீனவ சங்கம் அறிவிப்பு….!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு உரிமையாளர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளர் A.தாஜீதீன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 61நாள் மீன்படி தடைக்காலத்தில் இன்ஜின் பொருத்தப்பட்ட மற்ற அனைத்து நாட்டு படகுகளையும் அனுமதித்தால் அரசின் நோக்கம் நிறைவேறவில்லை, இதன் காரணமாக மீன் இனப்பெருக்கம் அடையாமல் விசைப்படகு மீனவர்களை நஷ்டமடைய செய்துள்ளது.இதனை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய,மாநில அரசுகளை கண்டணம் தெரிவிப்பது, கடல் சீற்றம் எனக்கூறி கடலுக்கு செல்ல கூடாது என்ற உத்தரவு மீன்வர்களை பெரிதும் பாதித்துள்ளது.

மீன் வளத்துறையை கண்டித்தும்,மீனவர்களின் வாழ்வாதரத்தை கணக்கில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க கோரியும் ஜூன் 29ம் தேதி மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter