Home » பத்திரிக்கையாளர்களை பணிசெய்ய விடாமல் தடுத்த காவல்துறைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் !

பத்திரிக்கையாளர்களை பணிசெய்ய விடாமல் தடுத்த காவல்துறைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் !

by
0 comment

சென்னை ~ சேலம் இடையே அமைக்க திட்டமிட்டுள்ள 8 வழி சாலை தொடர்பான செய்தி சேகரிக்கும் பணியில் திருவண்ணாமலை மாவட்டம் நம்பியந்தல் நயம்பாடி கிராமத்தில் சன் நியூஸ் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சாலை திட்டத்துக்காக நிலம் அளவீடு செய்யப்படுவதை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதை செய்தி சேகரித்து வந்துள்ள நிலையில் அங்கு இருந்த மாவட்ட காவல் ஆய்வாளர் சன் நியூஸ் செய்தியாளரை பணியை செய்ய விடாமல் தடுத்துள்ளார். காவல்துறையினரின் இந்த அத்துமீறல் போக்கினை சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வன்மையாக கண்டித்துள்ளது.

பத்திரிகையாளர்களின் செய்தி சேகரிக்கும் பணியை தடுத்து மிரட்டிய காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. காவல் துறையினரின் இந்த அத்துமீறலுக்கு அதிரை எக்ஸ்பிரஸ்ஸும் தனது கண்டனத்தை தெரிவித்திக்கொள்கிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter