கடந்த 30ஆம் தேதி முதல் அதிரை கரையூர் தெருவை சேர்ந்த முதியவர் மாரியப்பன் வயது 68 என்பவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் வைத்த வேண்டுகோளை அடுத்து நமது தளம் உள்ளிட்டவைகளில் படத்துடன் செய்தி வெளியானது.
இதனை தொடர்ந்து, சமூகவலைதளம் ,
வாட்ஸ் ஆப் ஆகியவலைகளில் பரவியது. இந்நிலையில் மதுக்கூரில் இவர் சுற்றி திரிவதாக தகவல் கிடைத்துள்ளன என்றும் அவரை மீட்க உறவினர்கள் சென்றுள்ளதாக அவரது மருமகன் புஷ்ப ராகவன் தெரிவித்தார்.
மேலும் இதற்கு உதவிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்வதாக கூரினார்.