அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக 01/07/2018 ஞாயிறு அன்று அன்னபூர்ணா தினத்தை முன்னிட்டு அதிரையை அடுத்த ராஜாமடத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கும் அங்குள்ள அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இவ்விழாவினை அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகத்தின் தலைவர் Rtn.M.k. முகமது சம்சுதீன் , செயளாலர் Rtn.Z. அகமது மன்சூர் , பொருளாளர் Rtn.M. சாகுல் ஹமீது ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி பயிலும் காப்பக மாணவர்களின் சீருடைக்காக நிதிஉதவியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் Rtn.T. முகமது நவாஸ்கான்,
Rtn. வெங்கடேஸன், Rtn.M. உதய குமார்,
முன்னாள் தலைவர்
Rtn.R. ஆறுமுகம், திட்ட ஒருங்கிணைப்பாளர் Rtn.N. ராஜேந்திரன் மற்றும் சங்க உறுப்பினர்கள்
Rtn.M. சலாஹுதீன்,
Rtn. நூருல்ஹஸன், Rtn.J. நவாஸ், Rtn.அய்யாவு, Rtn.M. மன்சூர்,
Rtn. ஜமால் முகமது
மற்றும் காப்பக நிர்வாக இயக்குனர் திரு.M.M. மணிவண்ணன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.