அதிராம்பட்டினத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தப்படியாக தேங்காய் விவசாயம் அதிகமாக உள்ள பகுதி இப்பகுதியில் விளையும் தேங்காய்களை சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்வார்கள்.
இவர்கள் வாங்கும் தேங்காய்களை மட்டை உரித்தே எடுத்து செல்கின்றனர்.
இதில்.சேமிக்கப்பட்ட மட்டைகளை தனியார் கயிறு நிருவனங்களுக்கு மண்டி உரிமையாளர்கள் விறபனை செய்கின்றனர்.
இம்மட்டைகள் தூத்துக்குடி, ஆறுமுகனேரி உள்ள தொலைதூரங்களுக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்கின்றன.
இவைகள் அதிரை சி எம் பி லைன் வழியாக மலைப்போல் குவிக்கப்பட்டு எடுத்து செல்கின்றனர்.
இதனால் வீடுகளுக்கு செல்லும் மின் ஒயர்கள், போன் ஒயர்கள்,டிவீ கேபிள்கள் அனைத்தும் அவ்வப்போது அறுந்து விழுகின்றன என்றும், இதனை வாடி உரிமையாளர்கள் முறைப்படுத்த வேண்டும் என்பதே சி எம் பி.லைன்.மக்களின் கோரிக்கையாகும்.