Home » அதிரையில் நடைபெறும் இலவச கண் பரிசோதனை முகாமில் பயன்பெற அழைப்பு !

அதிரையில் நடைபெறும் இலவச கண் பரிசோதனை முகாமில் பயன்பெற அழைப்பு !

0 comment

அதிரையில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. வருகிற 18.07.2018 புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து பகல் 1 மணி வரை அதிரை சாரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் கண்புரை , சர்க்கரை நோய் , குழந்தைகளின் கண்நோய் ஆகியவைக்கு பரிசோதித்து இலவசமாக சிகிச்சையளிக்கப்படும். தூரப்பார்வை , கிட்டப்பார்வை , வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு முகாமில் மலிவு விலையில் கண்ணாடி கிடைக்கும்.

மேலும் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வானவர்களுக்கு அனைத்து செலவுகளும் முற்றிலும் இலவசம். இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter