Home » தூத்தூர் கன்னியாகுமரி த்ரில் வெற்றி!!

தூத்தூர் கன்னியாகுமரி த்ரில் வெற்றி!!

0 comment

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.

இன்றைய தினம் தூத்தூர் கன்னியாகுமரி – கலைவானர் 7s கண்டனூர் அணிகள் மோதின.

முன்னதாக கடற்கரைத் தெரு ஜமாஅத் நிர்வாகிகளும், தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகளும் ஆட்டத்தை துவக்கி வைத்தனர்

அரையிறுதிக்கு செல்லும் முனைப்புடன் இரு அணியினரும் உத்வேகமாக அரங்கில் விளையாட, கண்டனூர் அணி சாமர்த்தியமாக ஒரு கோலை அடித்தது.

பின்னர் இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தின் நடுவில் தூத்தூர் கன்னியாகுமரி அணி தனக்கான கோலை அடித்துதும் ஆட்டம் 1-1 என்று சமநிலையில் மிகவும் பரபப்பானது.

அரையிறுதிக்கு செல்வது நீயா நானா என்ற உச்சகட்ட பரபரப்பில் இரு அணியினரும் கடைசி நிமிடங்களில் ஆடிக்கொண்டிருக்க தூத்தூர் அணி மற்றொரு கோல் அடித்து 2-1 முன்னிலை பெற்று கண்டனூரின் அரையிறுதி கனவை கானல் நீர் ஆக்கியது.

இதன் மூலம் தூத்தூர் கன்னியாகுமரி அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

நாளைய தினம் இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. முதல் ஆட்டமாக மாலை 4.30 மணிக்கு காரைக்கால் – நாகூர் அணிகளும், இரண்டாவது ஆட்டத்தில் அதிரை AFFA-பட்டுக்கோட்டை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter