Saturday, April 20, 2024

எழுச்சியுடன் நடைபெற்ற பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் வேன் பயணம் !

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை – திருவாரூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டியும் , சென்னைக்கு விரைவில் நேரடி ரயில் சேவையை துவங்க வேண்டியும் ரயில்வே நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டி பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி 14.07.2018 சனிக்கிழமை காலை 9.00 மணிக்குப் பட்டுக்கோட்டை ரயில் நிலையம் அருகில் துவங்கி மாலை 5.30 மணிக்கு திருவாரூர் ரயில் சந்திப்பில் நிறைவு பெற்றது. மக்கள் சந்திப்பு பயணத்தினை பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் தலைமையேற்று துவங்கி வைத்தார். துணை தலைவர் கா. லெட்சுமிகாந்தன் முன்னிலை வகித்தார். செயலாளர் வ. விவேகானந்தம் வரவேற்புரையாற்றினார். பயணத்தில் எஸ். ஸ்ரீதர் , எம். கலியபெருமாள் , எம். ஹெச். நஜ்முதீன் , டி.இராசேந்திரன் , வி.இராசேந்திரன் , ஆர். பாலசுப்பிரமணியன் , ஏ. இராசகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டையில் தொடங்கி அதிராம்பட்டினம் , தம்பிக்கோட்டை , முத்துப்பேட்டை , தில்லைவிளாகம் , பாண்டி , திருத்துறைப்பூண்டி , ஆலத்தம்பாடி , திருநெல்லிக்காவல் வழியாக திருவாருரை அடைந்தது. வழி நெடுகிலும் அகல ரயில்பாதை அமைக்கும் பணிகளை பார்த்து சென்றனர் . அதிராம்பட்டினத்தில் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் நிர்வாகிகள், முத்துப்பேட்டையில் வர்த்தக சங்கத்தினர் , ஜாம்பவானோடை தர்ஹா நிர்வாக கமிட்டி தலைவர் பாக்கர் அலி மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...