Home » சென்னையை ஓடவிட்ட கங்கை!!

சென்னையை ஓடவிட்ட கங்கை!!

0 comment

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை – சிவகங்கை அணிகள் மோதின.

முன்னதாக இவ்வாட்டத்தை காதிர் முஹைதீன் முன்னால் உடற்கல்வி ஆசிரியர் ராமசந்திரன், மதுக்கூர் கலாம் அவர்கள், கிராம நிர்வாகிகள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முன்னால் சாம்பியனான சென்னையும், நாகூரில் 1லட்சம் மதிப்பிலான தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சிவகங்கையும் விளையாடுவதினால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

அந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இரு அணி வீரர்களும் மிகத் துல்லியமாக செயல்பட்டனர்.

ஆட்டம் ஆரம்பித்த 10வது நிமிடத்தில் சென்னை அணி முதல் கோலை பதிவு செய்ய, அடுத்த 15வது நிமிடத்தில் பதிலுக்கு சிவகங்கையும் கோல் அடித்தது.

முதல் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் சமநலையில் ஆடி முடித்தனர்.

பின்னர் இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் மீண்டும் சென்னை அணி கோல் அடிக்க, அடுத்தடுத்து சிவகங்கை அணி 3 கோல்களை அடித்தது.

இறுதியில் சிவகங்கை அணி 4-2 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தியது.

இருப்பினும் இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் சலைத்தவர்கள் அல்லர் என்பதை இப்போட்டி நிரூபித்தது.

நாளைய தினம் தென்னரசு பள்ளத்தூர் – சிவகங்கை அணிகள் காலிறுதியில் சந்திக்கின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter