Home » பாய்ந்த கங்கையிடம் பதுங்கியது பள்ளத்தூர்!!

பாய்ந்த கங்கையிடம் பதுங்கியது பள்ளத்தூர்!!

0 comment

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.

இத்தொடரில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு கொண்டு விளையாடி வருகிறது.

இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தென்னரசு பள்ளத்தூர் – சிவகங்கை அணிகள் மோதின.

முன்னதாக இன்றைய ஆட்டத்தை ஆலத்தூர் கால்பந்து கழக நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.

முதல்பகுதி நேர ஆட்டத்தில் இரு அணியினரும் சிறப்பாக ஆடினாலும் சிவகங்கை அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.

பின்னர் இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் சிவகங்கை அபாரமாக ஆடி 3 கோல்களை தன்வசப்படுத்தியது.

இறுதியாக சிவகங்கை அணி 4-0 என்ற கோல் கணக்கில் பள்ளத்தூரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

நாளைய தினம் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தூத்தூர் கன்னியாகுமரி – சிவகங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter