அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 58 வது மாதாந்திர கூட்டம் கடந்த 13-07-2018 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைவர் சரபுதீன், முன்னிலை வகிக்க, முஆது என்கிற சிறுவறுடைய கிராஅத் மூலம் நிகழ்ச்சி ஆரம்பமானது.
கூட்டத்திற்கு வந்தவர்களை பொருளாளர் N.அபூபக்கர் வரவேற்று, செயலர் A.M.அஹமது ஜலீல் சிறப்புரை நிகழ்த்தினார்.
பின்னர் இனை செயலர் M. அப்துல் மாலிக் அறிக்கை வாசித்து பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள்:
- குர்பானி திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டு ஆடு, மற்றும் மாடு ( கூட்டுக்குர்பானி விஷயமாக ) அதன் விலை தொகையை விளக்கி சொல்லி அடுத்த கூட்டத்தில் விருப்பமுள்ள ரியாத் வாசிகள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கான பொறுப்புதாரி சகோ. அப்துல் மாலிக் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. தொலைபேசி என் : 0550629583
கூட்டுக்குர்பானி 1900 /- தனி நபர் 8000 /- ( APRX )
கடந்த நோன்பின் இறுதியில் ஜகாத் ,பித்ரா, சதகா நிதியை ரியாத்திலிருந்து பைத்துல்மாலுக்காக அனுப்பிய முழுத்தொகைக்கு ஆதரவும் பொருளாதார உதவியும் செய்த அதிரை வாசிகள் அனைவரையும் ரியாத் பைத்துல்மால் கிளையின் சார்பாக முழு நன்றியை தெரிவித்து மேலும் இதுபோன்ற சேவைகளை தொடர துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
- ABM தலைமையகம் மூலம் வட்டியில்லா நகை கடன் அதிகரிக்கும் விதத்தில் RECOVERING DEPOSIT விஷயமாக நினைவூட்டப்பட்டு பங்களிப்பு விருப்பமுள்ள நபர்கள் பெயர்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
- அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையில் கடந்த 5 வருட காலமாக சிறந்த முறையில் பொறுப்புதாரியாக பணியாற்றிய இரண்டு கீழ்காணும் சகோதரர்களை பாராட்டியும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
- சகோதரர் : M.I.அப்துல் ரசீது ( செயலாளர் )
- சகோதரர் : J.M.நெய்னா முகம்மது ( கொள்கை பரப்பு செயலாளர் )
5 மேலும் அந்த வெற்றிடத்தை நிரப்பும் பட்சத்தில் இக்கூட்டத்தில் ஒருமனதாக கீழ்காணும் பொறுப்புதாரிகள் நியமிக்கப்பட்டது. - சகோதரர் : A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
- சகோதரர் : A. ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )
- சகோதரர் : P.இமாம் கான் ( கொள்கை பரப்பு செயலாளர்
- ஆம்புலன்ஸ் தொடர்பான போதிய விளக்கம் அளிக்கப்பட்டு சர்ச்சைகள் முடித்து வைக்கப்பட்டது. மேலும் அதிரையிலுள்ள மீடியாக்கள் அனைவரும் எந்தவித பாகுபாடு இன்றி ஊரின் நலன் கருதி இனி வரும் ABM தலைமையகம் மாதாந்திர கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு எல்லா மீடியாக்களிலும் ஒரே நேரத்தில் செய்திகளை வெளியிடுமாறு ABMR கிளை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது.
இறுதியாக, இணைத் தலைவர் A.சாதிக் அகமது நன்றியுரை கூறினார்.