Home » என்று தீருமோ கடற்கரைத் தெருவின் அவலம் ?

என்று தீருமோ கடற்கரைத் தெருவின் அவலம் ?

0 comment

அதிரையின் பிரதான தெருக்களில் கடற்கரைத் தெருவும் ஒன்று. அரசின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , அங்கன்வாடி நிலையம் , மதரஸா என சிறுகுழந்தைகள் அதிகமாக இருக்கும் இங்கு , சாக்கடை பிரச்சனை தலைவிரித்தாடுகிறது.

அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் கடற்கரைத் தெருவாசிகள் பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல அதிரை பேரூராட்சி கண்டும் காணாமல் உள்ளது. இந்த சாக்கடை பிரச்சனை தொடர்பாக பட்டுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ திரு. C.V. சேகரையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனாலும் இது வரை அரசுத் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் நிரம்பி வழிந்து ரோட்டில் ஆறு போல ஓடும் சாக்கடையால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கும் , பள்ளி குழந்தைகளுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கடற்கரைத் தெருவில் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த சாக்கடை பிரச்சனையை தீர்க்க அதிரை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ? அல்லது வழக்கம்போல் கண்டும் காணாமல் இருக்குமா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வீடியோ இணைப்பு:-

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter