Home » கரண்ட் எப்போ சார் வரும்??

கரண்ட் எப்போ சார் வரும்??

0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- மின்சார துறையின் மாதாந்திர பராபரிப்பு பணிக்காக மாதத்தில் ஒரு நாள் அதாவது காலை 9:00 மணியிலிருந்து மாலை 5:00 மணி வரை மின்நிறுத்தம் செய்வதாக அறிவிப்புகளை மின்சார வாரியம் சார்பாக செய்திகள் வெளியிடப்படுகிறது.

ஆனால் துல்லியமாக மின்நிறுத்தம் செய்யும் மின்வாரியம் மாலை 6:00 மணிக்கு மேல் தான் மின்விநியோகம் செய்கின்றனர். இதனை பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ஒருவர் அதிராம்பட்டினம் மின்சார வாரியத்தில் தொடர்பு கொண்டு கேட்கையில் முறையாக பதிலளிக்காமல் அலட்சியப்படுத்தியிள்ளனர்.

இதுபோன்ற தவறான முன்னுதாரணங்களை அதிரை மின்சார வாரியம் தொடர்ந்து செய்து வருவதாக பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும் மின்சார வாரியம் இதற்கான தீர்வை தராவிட்டால் . பொதுநல வழக்கு போட நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter