Home » அதிரையில் அரைகுறை சாலை : மீதியை முழுங்கும் பேரூராட்சி!!

அதிரையில் அரைகுறை சாலை : மீதியை முழுங்கும் பேரூராட்சி!!

by
0 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள சாலைகள் தற்பொழுது சில நாட்களாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 13ஆம் வார்டில் தற்பொழுது தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் 13ஆம் வார்டு சாலை 21ஆம் வார்டுடன் சேர்ந்து முடிகிறது.

அரசு உத்தரவு படி 13 ஆம் வார்டு முழுவதும் தான் தார் சாலை அமைக்க வேண்டும்.

ஆனால், இவர்கள் 13ஆம் வார்டில் பாதி இடத்திற்கு மட்டும் தார் சாலை அமைத்து விட்டு மீதமுள்ள இடத்தை விட்டுவிட்டனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு மீதம் உள்ள இடம் 21 ஆம் வார்டுடன் சேர்வதால் அந்த இடத்திற்கு சாலை அமைக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

இது போல் அரைகுறையாக விட்டுவிடுவதால் அந்த இடத்தில் மழை நீர் தேங்கி நிற்கும்,

ஆகையால், தெரு மக்களின் கோரிக்கையாக 13ஆம் வார்டு முழுவதும் தார் சாலை அமைத்து தருமாறு கேட்டுக்கோள்கிறோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter